Wednesday 5 September 2012

SAMAYAL: சிக்கன் சாப்ஸ்



தேவைப்படும் பொருட்கள் :
1. காளான் - 4
2. பீன்ஸ் - 150 கிராம்
3. குடை மிளகாய் - 1
4. வெங்காயம் - 1
5. கோழிக் கறி - 350 கிராம்
6. இறைச்சி வேக வைத்த நீர் - 1/4 லிட்டர்
7. ஸோயா சாஸ் - 1 தேக்கரண்டி
8. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
9. உப்பு - ருசிக்கு ஏற்ப
10. மிளகு - 1 தேக்கரண்டி
11. ஷெர்ரி - 1 மேஜைக்கரண்டி
12. சோள மாவு - 1 தேக்கரண்டி
தயாரிப்பு முறை :
1. காளானை ஒரு பாத்திரத்தில் போடவும்
2. அதில் வெதுவெதுப்பான் நீரை ஊற்றவும்
3. இருபது நிமிடம் வரை ஊறவிடவும்.
4. ஊறிய பிறகு அதை எடுத்துத் தண்டுப்பகுதிகளை நீக்கி விடவும்
5. காளானை மாத்திரம் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
6. பீன்ஸைக் கழுவவும்
7. துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்
8. நார்களை அகற்றிக் கொள்ளவும்
9. குடை மிளகாய்களைக் கழுவிக் கொள்ளவும்
10. பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்
11. வெங்காயத்தைக் கழுவவும்
12. தோல் உரிக்கவும்
13. துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்
14.கறியைக் கழுவவும், துண்டுகளாக்கவும், பாத்திரத்திலிட்டு, அடுப்பிலேற்றி, அதை நன்றாக வேகவிடவும்.
தயாரிப்பு முறை :
1. இப்போது நறுக்கப்பட்ட காய்கறிகளுடன், வேக வைக்கப்பட்டுள்ள இறைச்சித் துண்டுகளைச் சேர்க்கவும்.
2. ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் இரண்டு மேஜைக் கரண்டி அளவு ஊற்றவும்.
3. எண்ணெயைக் காய விடவும்
4. காய்ந்தவுடன் காய்கறி, இறைச்சி கலந்த கலவையை அதில் போட்டுக் கிட்டத்தட்ட நான்கைந்து நிமிடங்கள் வதக்கவும்.
5. வதங்கிய பிறகு அதில் இறைச்சி வேக வைக்கப்பட்ட நீரை ஊற்றவும்.
6. அத்துடன் ஸோயா ஸாஸையும் ஊற்றவும்.
7. சர்க்கரையைக் கலக்கவும்
8. உப்பு ருசிக்குத் தேவையான அளவு போடவும்
9. மிளகைத் தூள் செய்து அதில் தூவவும்.
10. நன்றாகக் கொதிக்க விடவும்.
11. இதன் பின் அனலைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
12. ஒரு சிறிய பாத்திரத்தில் ஷெர்ரியை எடுத்துக் கொள்ளவும்
13. அதில் சோளமாவைக் கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளவும்.
14. இக் கலவையையும் அடுப்பில் உள்ள கலவையுடன் சேர்க்கவும்.
15. பின்னர், மேலும் ஐந்து நிமிடங்கள் இதை அடுப்பிலேயே வைத்திருக்கவும்.
16. சிக்கன் சாப்ஸ் ரெடி.


SAMAYAL: சிக்கன் சாப்ஸ்



தேவைப்படும் பொருட்கள் :
1. காளான் - 4
2. பீன்ஸ் - 150 கிராம்
3. குடை மிளகாய் - 1
4. வெங்காயம் - 1
5. கோழிக் கறி - 350 கிராம்
6. இறைச்சி வேக வைத்த நீர் - 1/4 லிட்டர்
7. ஸோயா சாஸ் - 1 தேக்கரண்டி
8. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
9. உப்பு - ருசிக்கு ஏற்ப
10. மிளகு - 1 தேக்கரண்டி
11. ஷெர்ரி - 1 மேஜைக்கரண்டி
12. சோள மாவு - 1 தேக்கரண்டி
தயாரிப்பு முறை :
1. காளானை ஒரு பாத்திரத்தில் போடவும்
2. அதில் வெதுவெதுப்பான் நீரை ஊற்றவும்
3. இருபது நிமிடம் வரை ஊறவிடவும்.
4. ஊறிய பிறகு அதை எடுத்துத் தண்டுப்பகுதிகளை நீக்கி விடவும்
5. காளானை மாத்திரம் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
6. பீன்ஸைக் கழுவவும்
7. துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்
8. நார்களை அகற்றிக் கொள்ளவும்
9. குடை மிளகாய்களைக் கழுவிக் கொள்ளவும்
10. பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்
11. வெங்காயத்தைக் கழுவவும்
12. தோல் உரிக்கவும்
13. துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்
14.கறியைக் கழுவவும், துண்டுகளாக்கவும், பாத்திரத்திலிட்டு, அடுப்பிலேற்றி, அதை நன்றாக வேகவிடவும்.
தயாரிப்பு முறை :
1. இப்போது நறுக்கப்பட்ட காய்கறிகளுடன், வேக வைக்கப்பட்டுள்ள இறைச்சித் துண்டுகளைச் சேர்க்கவும்.
2. ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் இரண்டு மேஜைக் கரண்டி அளவு ஊற்றவும்.
3. எண்ணெயைக் காய விடவும்
4. காய்ந்தவுடன் காய்கறி, இறைச்சி கலந்த கலவையை அதில் போட்டுக் கிட்டத்தட்ட நான்கைந்து நிமிடங்கள் வதக்கவும்.
5. வதங்கிய பிறகு அதில் இறைச்சி வேக வைக்கப்பட்ட நீரை ஊற்றவும்.
6. அத்துடன் ஸோயா ஸாஸையும் ஊற்றவும்.
7. சர்க்கரையைக் கலக்கவும்
8. உப்பு ருசிக்குத் தேவையான அளவு போடவும்
9. மிளகைத் தூள் செய்து அதில் தூவவும்.
10. நன்றாகக் கொதிக்க விடவும்.
11. இதன் பின் அனலைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
12. ஒரு சிறிய பாத்திரத்தில் ஷெர்ரியை எடுத்துக் கொள்ளவும்
13. அதில் சோளமாவைக் கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளவும்.
14. இக் கலவையையும் அடுப்பில் உள்ள கலவையுடன் சேர்க்கவும்.
15. பின்னர், மேலும் ஐந்து நிமிடங்கள் இதை அடுப்பிலேயே வைத்திருக்கவும்.
16. சிக்கன் சாப்ஸ் ரெடி.


SAMAYAL: ஆட்டு மூளை பொரியல்


தேவையான பொருள்கள்:
ஆட்டு மூளை - 2
மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணைய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.
* அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.
* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.
* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.
* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.
* நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.


Friday 15 June 2012

SAMAYAL: தக்காளி பச்சடி

தேவையான பொருள்கள்
தக்காளி - 5
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 3
பாசிப் பருப்பு - 100 கிராம்
சாம்பார்ப் பொடி - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
பாசிப் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை முழுசாக, நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். வெந்த பாசிப் பருப்புடன், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்ப் பொடியுடன் உப்பையும் போட்டுக் கொதிக்க விடுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், மல்லித்தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பருப்பு - தக்காளிப் பச்சடியை அதில் கொட்டவும்.
கொதித்துப் பக்குவமானதும் இறக்கி வைத்துப் பயன்படுத்தவும்.

Wednesday 13 June 2012

SAMAYAL: வெள்ளரி சாதம் செய்யுங்கள்

SAMAYAL: வெள்ளரி சாதம் செய்யுங்கள்:       பச்சரிசி  – 1 கப்     *வெள்ளரி துருவல் – 1 / 2 கப்     *பச்சை மிளகாய்   -  4     *இஞ்சி  – ஒரு துண்டு     *எலுமிச்சம்பழச்சாறு  – 1 மேச...

Saturday 26 May 2012

SAMAYAL: காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா


காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா
மசாலா அரைத்துக்கொள்ள:
வெங்காயம் - 2
பேல் பூரி - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 5
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
* வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும்.
* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு பட்டை புளி, கிராம்பு, 1 ஸ்பூன் சோம்பு பொரித்து, அத்துடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தணிந்த தீயில் எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும்.
* பிறகு கொதிக்க வைத்த காலிப்ளவர், பட்டாணி சேர்த்து, உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
* தக்காளி சாஸ் அரை கப், கலந்து, சில நிமிடம் கிளறியதும் கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி, சூடாக பரிமாறவும்.
* பட்டாணி சேர்த்த பின் பனீர் துண்டுகளும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.
* இந்த மசாலா எல்லா வகை சாதம், டிபன் வகைகளுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

Saturday 19 May 2012

SAMAYAL: மாங்காய் இனிப்பு தொக்கு

தேவையான பொருட்கள்

கிளிமூக்கு மாங்காய் - 1 பெரியது
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வெல்லம் (துருவியது) - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை

1. மாங்காயை தோல் சீவி சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.


3. பிறகு மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து, உடன் வெட்டி வைத்துள்ள மாங்காயைப் போட்டு கிளறி, 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

4. மாங்காய் நன்றாக வெந்ததும், துருவிய வெல்லத்தைப் போட்டு நன்றாகக் கிளறி, சுமார் ஐந்து நிமிடம் வரை சிறுதணலில் விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
குறிப்பு

1. இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவையோடு இந்த தொக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

2. இந்த தொக்கு குழைவாக வெந்து இருந்தால் சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

3. தேங்காய் சாதம், கறிவேப்பிலை சாதம், தயிர் சாதம் போன்ற சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

4. தொக்கு செய்யும் போது, அடுப்பை சிறு தணலில் மட்டுமே வேகவிடவும்.

SAMAYAL: வாழைக்காய் வறுவல்

வாழைக்காய் - 2
பூண்டு - 5 பல்
வரமிளகாய் - 10
சோள மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை

1. வாழைக்காய் நீள நீளத் துண்டுகளாக விரல் மொத்தத்தில் நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும்.

3. வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3. வெந்நீரில் போட்டு எடுத்த வாழைக்காயுடன் அரைத்த மசாலா விழுது, சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

4. எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த வாழைக்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

Sunday 6 May 2012

SAMAYAL SHORTCUTS: பாதாம் ஹல்வா

பாதாம்  ஹல்வா – சொலும்போதே நாவில் நீர் ஊற செய்யும் ஒரு இனிப்பு இது .
இதை பல வழிகளில் செயலாம் நாம் ஒவ்வொன்றாக பார்போம் .
தேவையானவை:
பாதாம் பருப்பு 2 கப் விழுது (250  கிராம் பருப்பை ஊறவைத்து , தோலுரித்து பாலில் அரைக்கவும் )
சக்கரை 2 கப்
பால் – 1/2 கப் பாதாமை அரைக்க
குங்குமப்பூ 10 -12 இழைகள்
நெய் 1 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன் (தேவையானால் )
செய்முறை:
பாதாம் பருப்பை 2 மணிநேரம் வெந்நீரில் ஊரவைக்கவும்
ஊரவைத்த பருப்பை ,தோலுரித்து பாலில் அரைக்கவும்
ரொம்ப பால் விட வேண்டாம், தோசைமாவை விட கெட்டியாக இருக்கணும்.
ஒரு உருளி இல் அரைத்தத்தை விட்டு, சக்கரை போட்டு  கிளற ஆரம்பிக்கணும்.
ஒரு சின்ன கிண்ணி இல் குங்குமப்பூவை போட்டு துளி பால் விட்டு வைக்கவும்
பிறகு கரைத்து ஹல்வாவில் கொட்டனும்.
ஹல்வா கொதிக்க ஆரம்பித்ததும் கைவிடாமல் கிளறவும்.
கொஞ்சம் திறந்து வரும் பொது, நெய் விட  ஆரம்பிக்கணும்.
கொஞ்சம் கொஜமாக விட்டு கிளறனும்.
கரைத்து வைத்துள்ள குங்கும பூவை இதில்  கொட்டவும்
நெய் முழுவதும் அந்த ஹல்வா  உறிந்து கொண்டு நன்கு பொரிந்து வரும்.
அப்ப இறக்கவும்.
ஆறினதும் அல்லது சுட சுட “பாதாம் ஹல்வா” வை  பரிமாறவும்.

SAMAYAL SHORTCUTS: பாதாம் ஹல்வா

பாதாம்  ஹல்வா – சொலும்போதே நாவில் நீர் ஊற செய்யும் ஒரு இனிப்பு இது .
இதை பல வழிகளில் செயலாம் நாம் ஒவ்வொன்றாக பார்போம் .
தேவையானவை:
பாதாம் பருப்பு 2 கப் விழுது (250  கிராம் பருப்பை ஊறவைத்து , தோலுரித்து பாலில் அரைக்கவும் )
சக்கரை 2 கப்
பால் – 1/2 கப் பாதாமை அரைக்க
குங்குமப்பூ 10 -12 இழைகள்
நெய் 1 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன் (தேவையானால் )
செய்முறை:
பாதாம் பருப்பை 2 மணிநேரம் வெந்நீரில் ஊரவைக்கவும்
ஊரவைத்த பருப்பை ,தோலுரித்து பாலில் அரைக்கவும்
ரொம்ப பால் விட வேண்டாம், தோசைமாவை விட கெட்டியாக இருக்கணும்.
ஒரு உருளி இல் அரைத்தத்தை விட்டு, சக்கரை போட்டு  கிளற ஆரம்பிக்கணும்.
ஒரு சின்ன கிண்ணி இல் குங்குமப்பூவை போட்டு துளி பால் விட்டு வைக்கவும்
பிறகு கரைத்து ஹல்வாவில் கொட்டனும்.
ஹல்வா கொதிக்க ஆரம்பித்ததும் கைவிடாமல் கிளறவும்.
கொஞ்சம் திறந்து வரும் பொது, நெய் விட  ஆரம்பிக்கணும்.
கொஞ்சம் கொஜமாக விட்டு கிளறனும்.
கரைத்து வைத்துள்ள குங்கும பூவை இதில்  கொட்டவும்
நெய் முழுவதும் அந்த ஹல்வா  உறிந்து கொண்டு நன்கு பொரிந்து வரும்.
அப்ப இறக்கவும்.
ஆறினதும் அல்லது சுட சுட “பாதாம் ஹல்வா” வை  பரிமாறவும்.

SAMAYAL: சத்துமாவு கஞ்சி

இது ரொம்ப சத்தான கஞ்சி . வீட்டிலேயே தயார் செயலாம் ; கடைகளிலும் பாக்கெட் போட்டு
விற்பதைக்காட்டிலும் நாமே செய்து கொடுப்பது சிறந்தது புன்னகை இனி செய்முறை யை பார்க்கலாம் .
தேவையானவை :
வேர்கடலை 1 கப்
புழுங்கல் அரிசி 1 கப்
சம்பா கோதுமை 1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
கேழ்வரகு 1 கப்
பயத்தம் பருப்பு 1 கப்
செய்முறை :
வாணலி இல் ஒவ்வொரு ஐட்டமாக போட்டு பொன் வறுவலாக வறுக்கணும்.
தனித்தனியாக வறுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
ஆறினதும் மாவு மிஷின் இல் மாவாக அறக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
தேவை படும் போது, கஞ்சி தயாரித்து தரவும்.
குழந்தை இன் விருப்பத்தை பொறுத்து பால் சர்க்கரை அல்லது மோர் + உப்பு போட்டு தரலாம் .
குறிப்பு: கஞ்சி செய்ய : குழந்தைகளானால் 1 ஸ்பூன்; பெரியவர்களானால் 2 – 3 ஸ்பூன் போட்டு கஞ்சி தயாரிக்கவும். பெரியவர்களும் குடிக்கலாம். பெரியவர்கள் மோர் விட்டு உப்பு போட்டு குடிக்கலாம் அல்லது ரசம், சாம்பார் ஊறுகாய் ஏதாவது ஒன்று சேத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும் , நல்லா பசி தாங்கும்.
உருண்டை தயாரிக்க : விரத நாட்களில் இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம்

SAMAYAL SHORTCUT: வெங்காய மசாலா

தேவையான பொருட்கள் :

1 .வெங்காயம் - 3
2 .உருளைக்கிழங்கு - 1
3 .பட்டாணி - 50 கிராம்
4 .தக்காளி - 2
5 .நல்லெண்ணெய் - தேவையான அளவு
6 .காய்ந்த மிளகாய் - 10
7 .சீரகம் - 1 ஸ்பூன்
8 .கொத்தமல்லி - 1 ஸ்பூன்
9 .கடுகு - சிறிதளவு
10 .உப்பு - தேவையான அளவு
11 .மஞ்சள்த்தூள் - 1 ஸ்பூன்

செய்முறை :

சிறிதளவு வெங்காயம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றை
மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். அதன் பிறகு பட்டாணியையும், உருளைகிழங்கையும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும். அதன் பிறகு அரைத்த மசாலாவை போட்டு வாசனை வரும் வரை வதக்கி விட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் வேக வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு இவை இரண்டையும் போட வேண்டும். பின்பு உப்பு, மஞ்சள்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் தெளியவும், இறக்கவும்.சுவையான வெங்காய மசாலா டிஷ் ரெடி.

Wednesday 2 May 2012

சமையல் ஸ்டார்

மனிதன் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ நாக்கை நமக்கு அடிமையாக்க வேண்டும்.நாக்கிற்கு நாம் அடிமையாக கூடாது